செய்திகள்
மிரட்டல்

குளித்தலை அருகே மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2021-11-17 18:19 GMT   |   Update On 2021-11-17 18:19 GMT
குளித்தலை அருகே மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

குளித்தலை சேர்ந்தவர் பானுமதி (வயது 60). இவரது பேத்தி மற்றும் அவரது உறவினரது மகளும் ஆகிய 2 சிறுமிகளும் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (40) அரிவாளை காட்டி சிறுமிகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கேட்ட பானுமதியை அவர் தகாதவார்த்தைகளால் திட்டி, தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்துள்ளனர்.
Tags:    

Similar News