ரெயில் முன்பு பாய்ந்து விவசாயி தற்கொலை
திருச்சி:
திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வேங்கூர் அருகே உள்ள ரெயில்வே தண்ட வாளத்தில் திடீரென திருச்சி வழி மயிலாடுதுறை சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திருச்சி ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருச்சி ரெயில் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினார்கள்.
விசாரணையில் பாலமுருகனுக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததும் அதை குணப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தததும் அதனால் தான் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. ரெயில் நிலைய போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.