செய்திகள்
டிரைவர் பலி

செய்யாறில் கால்வாயில் தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

Published On 2021-11-05 10:05 GMT   |   Update On 2021-11-05 10:05 GMT
செய்யாறில் கால்வாயில் தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு:

செய்யாறு கொடநகர் பை-பாஸ் சாலையில் இன்று காலை சிறிய பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் உள்ளதாக பொதுமக்கள் பார்த்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது இறந்தவர் செய்யாறு டவுன் சமாதியான குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (வயது 44), என்பதும் அவருக்கு அம்பிகா என்ற மனைவியும் ரஞ்சித், ஹரிபிரசாத், லோகேஸ்வரி என்ற மகன்களும், ஒரு மகள் உள்ளதாகவும், இறந்த ராஜாவிற்கு மதுப்பழக்கம் உள்ளதாகவும் எனவே மதுவினால் மயக்கம் ஏற்பட்டு விழுந்தாரா அல்லது அவர் இறப்புக்கு வேறு எதும் காரணம் உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News