செய்திகள்
ஈரோட்டில் ரூ.10 கோடி மோசடி செய்த ஏலச்சீட்டு நிறுவனம் மீது குவியும் புகார்கள்
ஏலச்சீட்டு நடத்திய பாபு ரூ.10 கோடி வரை மோசடி செய்திருந்த நிலையில் தற்போது அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் மேலும் பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.
ஈரோடு:
ஈரோடு சூளை சி.எஸ். நகரைச் சேர்ந்தவர் பாபு (56). சோப்பு தயாரிப்பு நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார்.
இவர் அசோகபுரம் பிரதான சாலையில் அலுவலகம் அமைத்து ஏலச்சீட்டு நடத்தினார். இதில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீட்டு பணம் செலுத்தினர். இவர் ஏலச்சீட்டில் பணம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 28-ந்தேதி ஏலச்சீட்டு நடத்தி வந்த பாபு திடீரென தலைமறைவானார். இதனால் பணம் கட்டிய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 28-ந்தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பாபுவை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இதுகுறித்து புகார் செய்யலாம் என்றும் போலீசார் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கூறியதாவது:-
ஏலச்சீட்டு மோசடி குறித்து இதுவரை 360 பேர் புகார் செய்துள்ளனர். புகார்கள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வேறு யாராவது இதுபோல் ஏலச்சீட்டில் பணம் செலுத்தி ஏமாந்து இருந்தால் அவர்களும் முன் வந்து புகார் அளிக்கலாம். தலைமறைவாக இருக்கும் தொழில் அதிபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏலச்சீட்டு நடத்திய பாபு ரூ.10 கோடி வரை மோசடி செய்திருந்த நிலையில் தற்போது அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் மேலும் பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.
ஈரோடு சூளை சி.எஸ். நகரைச் சேர்ந்தவர் பாபு (56). சோப்பு தயாரிப்பு நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தார்.
இவர் அசோகபுரம் பிரதான சாலையில் அலுவலகம் அமைத்து ஏலச்சீட்டு நடத்தினார். இதில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீட்டு பணம் செலுத்தினர். இவர் ஏலச்சீட்டில் பணம் எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 28-ந்தேதி ஏலச்சீட்டு நடத்தி வந்த பாபு திடீரென தலைமறைவானார். இதனால் பணம் கட்டிய பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த 28-ந்தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பாபுவை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இதுகுறித்து புகார் செய்யலாம் என்றும் போலீசார் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் கூறியதாவது:-
ஏலச்சீட்டு மோசடி குறித்து இதுவரை 360 பேர் புகார் செய்துள்ளனர். புகார்கள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இன்னும் ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வேறு யாராவது இதுபோல் ஏலச்சீட்டில் பணம் செலுத்தி ஏமாந்து இருந்தால் அவர்களும் முன் வந்து புகார் அளிக்கலாம். தலைமறைவாக இருக்கும் தொழில் அதிபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏலச்சீட்டு நடத்திய பாபு ரூ.10 கோடி வரை மோசடி செய்திருந்த நிலையில் தற்போது அவர் மீது புகார்கள் குவிந்து வருவதால் மேலும் பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.