செய்திகள்
போலீசார் விசாரணை

சாத்தூரில் அரசு பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மி‌ஷம் செய்த கண்டக்டர்- போலீசார் விசாரணை

Published On 2021-11-01 09:19 GMT   |   Update On 2021-11-01 09:19 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பெண் டாக்டர் உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

தினமும் அரசு பஸ்சில் டாக்டர் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று அரசு பஸ்சில் பயணம் செய்த அவர் டிரைவர் இருக்கைக்கு 2 இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார்.

பஸ் சென்று கொண்டிருந்தபோது அவரது பின் இருக்கையில் பஸ் கண்டக்டர் சிவராமைய்யா வந்து அமர்ந்தார். அவர் பெண் டாக்டரிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், கண்டக்டரை கண்டித்தார். பஸ் டிரைவரும், கண்டக்டரை எச்சரித்தார்.

இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசில் பெண் டாக்டர் புகார் செய்தார. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News