செய்திகள்
கைது

சரக்கு வேனில் மணல் கடத்தியவர் கைது

Published On 2021-10-01 14:49 IST   |   Update On 2021-10-01 14:49:00 IST
சரக்கு வேனில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ்ஸ்டாலின் தலைமையில், போலீசார் இலுப்பூர் அருகே உள்ள கோங்குடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் ஆவூர் மேலப்பட்டியை பகுதியை சேர்ந்த பாரதிராஜா (வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News