செய்திகள்
திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி திருட்டு

Published On 2021-09-26 13:05 GMT   |   Update On 2021-09-26 13:05 GMT
பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி:

மணமேல்குடி அருகே கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆத்மநாதன் மனைவி மாசிலா. இவர், கட்டுமாவடியிலிருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். மணமேல்குடி பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது மாசிலாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடி சென்றனர். இதுகுறித்து மாசிலா மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News