செய்திகள்
வேதாரண்யம் அருகே சூதாடிய 6 பேர் மீது வழக்கு
வேதாரண்யம் அருகே சூதாடிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வேதாரண்யம் நகராட்சி பகுதியை சேர்ந்த மறைஞானநல்லூர் பூப்பெட்டி பகுதியில் ரோந்து சென்றபோது பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது 42), தீபக் (34), சுரேஷ் (35) ஆகிய 3 பேரை பிடித்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த தேவா (25), சிவசுந்தர் (38), வினோத் (26) ஆகிய மூவரையும் பிடித்து பணத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வேதாரண்யம் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் வீராசாமி மற்றும் போலீசார் தேத்தாகுடி வடக்கு கிராமத்தில் தம்பிகவுண்டர்காடு என்ற பகுதியில் ரோந்து சென்றபோது ராஜ சூரியன் (வயது 53) என்பவர்கள் விற்றுள்ளார். அவரை பிடித்து 3 லிட்டர் பனங்கள் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.