செய்திகள்
கொரோனா பரிசோதனை

சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2021-06-01 16:15 GMT   |   Update On 2021-06-01 16:15 GMT
கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
வேளாங்கண்ணி:

கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அருண்பதி முன்னிலை வகித்தார். நாகைமாலி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் டாக்டர் அரவிந்த்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி மற்றும் தொழில்நுட்ப செவிலியர் ஷீலாவதி, ஊராட்சிமன்ற துனணத்தலைவர் சிவஞானம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News