செய்திகள்
வீட்டில் விற்பனைக்காக 1¼ கிலோ கஞ்சா பதுக்கல்- வாலிபர் கைது
செம்பனார்கோவில் அருகே வீட்டில் விற்பனைக்காக 1¼ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:
செம்பனார்கோவில் சரகம் பரசலூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மயில்வாகணன் (36). இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் மயில்வாகணனை கைது செய்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் மாவட்ட செயலாளராக மயில் வாகணன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
செம்பனார்கோவில் சரகம் பரசலூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மயில்வாகணன் (36). இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் மயில்வாகணனை கைது செய்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் மாவட்ட செயலாளராக மயில் வாகணன் இருந்தது குறிப்பிடத்தக்கது.