செய்திகள்
கைது

வீட்டில் விற்பனைக்காக 1¼ கிலோ கஞ்சா பதுக்கல்- வாலிபர் கைது

Published On 2021-05-29 15:03 IST   |   Update On 2021-05-29 15:03:00 IST
செம்பனார்கோவில் அருகே வீட்டில் விற்பனைக்காக 1¼ கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:

செம்பனார்கோவில் சரகம் பரசலூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மயில்வாகணன் (36). இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் மயில்வாகணனை கைது செய்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் மாவட்ட செயலாளராக மயில் வாகணன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News