செய்திகள்
கொரோனா தடுப்பூசி

வாய்மேடு, வேதாரண்யம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-05-26 21:26 IST   |   Update On 2021-05-26 21:26:00 IST
வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் கிழக்கில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
வாய்மேடு:

வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் கிழக்கில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு ஊராட்சிமன்ற தலைவர் வீரத்தங்கம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவகுரு பாண்டியன், தேவிசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகாமில் டாக்டர்கள் சுந்தர்ராஜன், வெங்கடேஷ், பரத் ஆகியோர் கலந்து கொண்டு மருதூர், பஞ்சநதிக்குளம், தகட்டூர், தென்னடார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

இதேபோல மருதூர் ஊராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இதில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.இதில்மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உமா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க.அன்பரசன், வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

அதேபோல் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் இரா.கண்ணன் தலைமை தாங்கினார்.முகாமில் 150-பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகராட்சியின் சார்பில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் ராஜசேகர், சுகாதார பணியாளர்கள் கொண்ட குழுவினர் 200 பேருக்கு தடுப்பூசி போட்டனர்..இதேபோல் வேதாரண்யம் தாலுகாவில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.நேற்று ஒரே நாளில் வேதாரண்யம் பகுதியில் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Similar News