செய்திகள்
பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.19 லட்சத்தை தாசில்தார் ஒப்படைத்த காட்சி.

காட்டுமன்னார்கோவில் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.19 லட்சம் பறிமுதல்

Published On 2021-03-27 14:33 IST   |   Update On 2021-03-27 14:33:00 IST
ரூ.19 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ராமதாசிடம் ஒப்படைத்தனர்
ஸ்ரீமுஷ்ணம்:

தமிழகத்தில் வருகிற (6-ந் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.19 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வேனில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் சிதம்பரம் அருகே உள்ள தேரியூர் பகுதியை சேர்ந்த ஜீவன் (வயது 30). என்பதும் அவர் லால்பேட்டை பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பி விட்டு மீதி உள்ள பணத்தை வங்கிக்கு எடுத்து செல்வதாக கூறினார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி அந்த பணத்தை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரூ.19 லட்சத்தை பறக்கும் படை அதிகாரி கள் பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.



Similar News