செய்திகள்
போதை ஊசி விற்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்மையப்பட்டி பஸ் நிறுத்த பகுதியில் போதை ஊசியை விற்பனைக்காக வைத்திருந்த ராஜாவை (வயது 35) போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மாத்திரைகள், ஊசி ஒன்று மற்றும் ரூ.200-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.