செய்திகள்
கொரோனா தடுப்பூசி ஒத்திகை

நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி

Published On 2021-01-09 15:47 GMT   |   Update On 2021-01-09 15:47 GMT
நாகை அரசு மருத்துவமனை, வேதாரண்யம் நகர சுகாதார நிலையம், சிக்கல் அன்பு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்:

தமிழகம் முழுவதும் நேற்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி நாகை அரசு மருத்துவமனை, வேதாரண்யம் நகர சுகாதார நிலையம், சிக்கல் அன்பு மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருபவரின் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யப்பட்டது. 

தொற்றுக்குள்ளாவர்களை காத்திருப்போர் அறையில் தங்க வைத்து பின்னர் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஓய்வறையில் வைத்து கண்காணிப்பது என 4 நிலைகளாக இந்த ஒத்திகை நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் நர்சுகள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களின் என தலா 25 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் சண்முகசுந்தரம், மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன், கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் லியாகத் அலி மற்றும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News