செய்திகள்
தற்கொலை

கடன் தொல்லை: விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2020-12-20 15:21 IST   |   Update On 2020-12-20 15:21:00 IST
கடலூர் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பை சேர்ந்தவர் பிச்சாண்டி மனைவி கலைச்செல்வி (வயது 40). இவர் மகளிர் சுயஉதவி குழுவில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாங்கிய கடனை கலைச்செல்வியால் திரும்ப செலுத்த முடியாததால், அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இதற்கிடையே சம்பவத்தன்று அவர், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து அவரது மகள் இந்துமதி(25), கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News