செய்திகள்
கோப்புபடம்

நெல்லிக்குப்பம் அருகே ஷேர் ஆட்டோவில் சாராயம் கடத்திய 3 பேர் கைது

Published On 2020-12-17 19:33 IST   |   Update On 2020-12-17 19:33:00 IST
நெல்லிக்குப்பம் அருகே ஷேர் ஆட்டோவில் சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி தலைமையிலான போலீசார் நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் சாராய பாக்கெட்டுகளுடன் 2 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆட்டோவில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கடலூர் சேடப்பாளைத்தை சேர்ந்த மாயவன்(வயது 70), சண்முகம்(58), குணமங்கலத்தை சேர்ந்த காசிலிங்கம்(47) ஆகியோர் என்பதும், புதுச்சேரி பகுதியில் இருந்து 110 லிட்டர் சாராயத்தை வாங்கி, கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சாராயத்தை கடத்தி வந்த மாயவன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சாராய பாக்கெட்டுகள் கொண்ட 2 மூட்டைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது

Similar News