செய்திகள்
முருகன்

வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் 14-வது நாளாக உண்ணாவிரதம்

Published On 2020-12-07 02:47 GMT   |   Update On 2020-12-07 02:47 GMT
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், உறவினர்களுடன் ‘வாட்ஸ் அப்’பில் பேச அனுமதிமதிக்க கோரி 14-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கணவன்-மனைவி இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் முருகன் தனது உறவினர்களிடம் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 23-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜெயில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. அவரின் உடல்நிலையை ஜெயில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அவர் 14-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
Tags:    

Similar News