செய்திகள்
கோப்புபடம்

காட்பாடி அருகே ரெயில் மோதி முதியவர் பலி: யார் அவர்? போலீஸ் விசாரணை

Published On 2020-12-03 14:24 GMT   |   Update On 2020-12-03 14:24 GMT
காட்பாடி அருகே ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:

காட்பாடி ரெயில் நிலையத்திற்கும், சேவூர் ரெயில் நிலையத்திற்கும் இடையில் நேற்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது ரெயில்மோதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News