செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

Published On 2020-12-02 02:37 GMT   |   Update On 2020-12-02 02:37 GMT
வேலூர் ஜெயிலில் 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரின் உடல்நிலையை ஜெயில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார். 

இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினரிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி கேட்டு கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதன்படி நேற்று 9-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

அவரின் உடல்நிலையை ஜெயில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News