செய்திகள்
கைது

தூசி அருகே மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது

Published On 2020-11-23 08:41 GMT   |   Update On 2020-11-23 08:41 GMT
தூசி அருகே பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:

செய்யாறு தாலுகா மகாஜனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 22), டிராக்டர் டிரைவர். ஏற்கனவே திருமணமான இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது இளம்பெண்ணை பாலாஜி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இளம்பெண்ணை பாலாஜி கடத்திசென்றதாக மாணவியின் தந்தை தூசி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் கிருஷ்ணகிரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் அங்கு சென்று இருவரையும்அழைத்து வந்தனர். பின்னர் மாணவியை கடத்தி சென்ற பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News