செய்திகள்
கோப்பு படம்.

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை

Published On 2020-11-21 06:43 GMT   |   Update On 2020-11-21 06:43 GMT
போளூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை:

போளூர் அருகே உள்ள கங்களமகாதேவி பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 41). இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பரசுராமனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News