செய்திகள்
காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்- செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்ததால் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரிய கலத்தாம்பாடியை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன் (வயது21). கூலி தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு திடீரென வேறு மாப்பிள்ளையுடன் பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர்.
இதனால் விரக்தி அடைந்த சவுந்தரபாண்டியன் இன்று காலை செங்கம் அருகே உள்ள கோனாங்குட்டை கேட் என்ற இடத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி உச்சிக்கு சென்றார்.
வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறுவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு செங்கம் டி.எஸ்.பி. சரவணகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
செங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
டி.எஸ்.பி. சரவணகுமார் வாலிபரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
காதலியை அழைத்து வந்தால் மட்டுமே செல்போன் டவரில் இருந்து இறங்குவதாக வாலிபர் அடம்பிடித்து தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இளம்பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாக டி.எஸ்.பி. சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வாலிபர் கீழே இறங்கி வர சம்மதித்தார்.
தீயணைப்பு வீரர்கள் செல்போன் டவரில் ஏறி வாலிபரை பத்திரமாக கீழே மீட்டு வந்தனர். இதையடுத்து போலீசார் வாலிபரை செங்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்ததால் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரிய கலத்தாம்பாடியை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன் (வயது21). கூலி தொழிலாளி.
இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு திடீரென வேறு மாப்பிள்ளையுடன் பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர்.
இதனால் விரக்தி அடைந்த சவுந்தரபாண்டியன் இன்று காலை செங்கம் அருகே உள்ள கோனாங்குட்டை கேட் என்ற இடத்தில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி உச்சிக்கு சென்றார்.
வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறுவதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு செங்கம் டி.எஸ்.பி. சரவணகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
செங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
டி.எஸ்.பி. சரவணகுமார் வாலிபரின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
காதலியை அழைத்து வந்தால் மட்டுமே செல்போன் டவரில் இருந்து இறங்குவதாக வாலிபர் அடம்பிடித்து தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இளம்பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாக டி.எஸ்.பி. சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வாலிபர் கீழே இறங்கி வர சம்மதித்தார்.
தீயணைப்பு வீரர்கள் செல்போன் டவரில் ஏறி வாலிபரை பத்திரமாக கீழே மீட்டு வந்தனர். இதையடுத்து போலீசார் வாலிபரை செங்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்ததால் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.