செய்திகள்
போளூர் சாலையில் சுகுணாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெண் தற்கொலை வழக்கில் தந்தை-மகன் கைது

Published On 2020-11-12 16:41 IST   |   Update On 2020-11-12 16:41:00 IST
கலசபாக்கம் அருகே பெண் தற்கொலை வழக்கில் தந்தை - மகனை போலீசார் கைது செய்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலசபாக்கம்:

கலசபாக்கம் தாலுகா மேலாரணி மதுரா மேல்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 30). அவருடைய மனைவி சுகுணா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சுகுணாவிடம் மாமியாரும், மாமனாரும் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுகுணா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுகுணாவின் உறவினர்கள் அவரது சாவுக்கு காரணமான கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரையும் கைது செய்யக்கோரி திடீரென போளூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து வென்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுணாவின் கணவர் அன்புச்செல்வன், மாமனார் ஏழுமலை (50) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Similar News