செய்திகள்
கைது

சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2020-11-11 08:28 GMT   |   Update On 2020-11-11 08:28 GMT
மங்கலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை:

மங்கலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை கலஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் (வயது 30), துரிஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (32), விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா மனந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (42) ஆகியோரை திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான மங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேர் மீது சாராய விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் மோகன்தாஸ், சக்திவேல், வெங்கடேசன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 126 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News