செய்திகள்
கொள்ளை

கலசபாக்கம் அருகே பள்ளியின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு

Published On 2020-11-10 11:02 IST   |   Update On 2020-11-10 11:02:00 IST
கலசபாக்கம் அருகே பள்ளியின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்:

கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழுதான கம்ப்யூட்டர்களை, கணினி அறையில் தனியாக வைத்து பூட்டி வைத்துள்ளனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கணினி அறையில் தனியாக வைத்திருந்த பழுதான கம்ப்யூட்டர்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து கடலாடி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News