செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை படத்தில் காணலாம்.

ஏரியில் மண் கடத்த முயன்ற 11 டிராக்டர், 2 பொக்லைன் எந்திரம் பறிமுதல் - 13 பேர் கைது

Published On 2020-11-05 23:47 IST   |   Update On 2020-11-05 23:47:00 IST
போளூர் அருகே ஏரியில் மண் கடத்த முயன்ற 11 டிராக்டர், 2 பொக்லைன் எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்து 13 பேரை கைது செய்தனர்.
போளூர்:

போளூரை அடுத்த மண்டகொளத்தூர் ஏரியிலிருந்து செங்கல் சூளைக்கு பயன்படுத்த சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி கொண்டிருப்பதாக போளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், பாஷ்யம், மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது 11 டிராக்டர், 2 பொக்லைன் எந்திரம் ஆகியவற்றில் ஏரி மண் அள்ளப்பட்டு நிரப்பி புறப்பட தயார் நிலையில் இருந்தன. போலீசார் வருவதை கண்டதும் டிராக்டர்களை அங்கேயே நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மண்டகொளத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 27), கருணாகரன்(45), சிவகுமார்(31), முத்துராமன்(28), சாந்தகுமார்(40), கமலக்கண்ணன்(40), மணிகண்டன் (32), விஜயகுமார் (35), வேதகிரி (35), அண்ணாதுரை (45), புவிவானந்தலை சேர்ந்த சுரேஷ் (32), நரசிங்கபுரத்தை சேர்ந்த சத்யபிரகாஷ் (34), மொடையூரை சேர்ந்த கார்த்திகேயன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 13 பேரையும் போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்.

அதனை தொடர்ந்து ஏரி மண்ணுடன் 11 டிராக்டர்கள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலையில் நிறுத்தப்பட்டன.

Similar News