செய்திகள்
மணல் கடத்திய 2 பேர் கைது - லாரி பறிமுதல்
தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேடி மற்றும் போலீசார், பீமனூர்-சுருளிஅள்ளி சாலையில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் காரிமங்கலம் அருகே உள்ள பூசாரிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வேல்மணி (வயது 32), உரிமையாளர் பாலக்கோடு சதாசிவம் டிரைவர் (49) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்
காவேரிப்பட்டணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேடி மற்றும் போலீசார், பீமனூர்-சுருளிஅள்ளி சாலையில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் காரிமங்கலம் அருகே உள்ள பூசாரிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வேல்மணி (வயது 32), உரிமையாளர் பாலக்கோடு சதாசிவம் டிரைவர் (49) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்