செய்திகள்
கோப்புபடம்

ராயக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய தந்தை, மகன் கைது

Published On 2020-10-30 14:00 GMT   |   Update On 2020-10-30 14:00 GMT
ராயக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் அடுத்த நெருப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பையா (வயது 54). இவரிடம் அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ், (54), அவரது மகன் அழகேசன் (25) ஆகிய 2 பேரும் தகராறு செய்தனர். 

அதை தட்டிக்கேட்ட அப்பையாவின் மகள் அலமேலுவை, தங்கராஜ், அவருடைய மகன் 2 பேரும் தாக்கினார்கள். இது தொடர்பாக, கெலமங்கலம் போலீசில் அலமேலு புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜ், அவரது மகன் அழகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News