செய்திகள்
ராயக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய தந்தை, மகன் கைது
ராயக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அடுத்த நெருப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பையா (வயது 54). இவரிடம் அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ், (54), அவரது மகன் அழகேசன் (25) ஆகிய 2 பேரும் தகராறு செய்தனர்.
அதை தட்டிக்கேட்ட அப்பையாவின் மகள் அலமேலுவை, தங்கராஜ், அவருடைய மகன் 2 பேரும் தாக்கினார்கள். இது தொடர்பாக, கெலமங்கலம் போலீசில் அலமேலு புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜ், அவரது மகன் அழகேசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.