செய்திகள்
கோப்புபடம்

ஓசூரில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் - கட்டிட தொழிலாளி கைது

Published On 2020-10-30 13:35 GMT   |   Update On 2020-10-30 13:35 GMT
ஓசூரில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் கோவிந்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் மந்தாரகுட்டை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவர் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில் வாலிபர் பிரபாகரன், சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தார். அவர் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News