செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் தேன்கனிக்கோட்டை-பெட்டமுகிலாளம் இடையே வண்ணேபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற அதே ஊரைச் சேர்ந்த தனசேகரன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.