செய்திகள்
கடைகளுக்கு சீல்

காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல்

Published On 2020-07-30 12:00 GMT   |   Update On 2020-07-30 12:00 GMT
காஞ்சீபுரம் மேற்கு ராஜவீதியில் இயங்கி வந்த ஜவுளி கடை உள்பட மொத்தம் 4 கடைகள் விதிமுறைகளை மீறியதாக சீல் வைக்கப்பட்டது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் சின்ன காஞ்சீபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சமூக இடைவெளி இல்லாமல் செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் காஞ்சீபுரம் மேற்கு ராஜவீதியில் இயங்கி வந்த ஜவுளி கடை உள்பட மொத்தம் 4 கடைகள் விதிமுறைகளை மீறியதாக சீல் வைக்கப்பட்டது.
Tags:    

Similar News