செய்திகள்
மதுபாட்டில்கள் திருட்டு

மதுக்கடை பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

Published On 2020-07-11 09:30 GMT   |   Update On 2020-07-11 09:30 GMT
செம்பனார்கோவில் அருகே மதுக்கடை பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே குரங்குபுத்தூரில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் விற்பனையாளர் வேல்முருகன் ஆகியோர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை மதுக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் மற்றும் மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கடைக்கு வந்து பார்த்தபோது ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காணவில்லை. மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் மர்ம நபர்கள் கடையில் கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த கணினி பாகங்களை அருகே உள்ள காவிரி ஆற்றில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News