செய்திகள்
கொரோனா நிவாரணமாக ரூ.12 ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
கொரோனா நிவாரணமாக மத்திய, மாநில அரசுகள் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் உள்ள ரேசன் கடைகள் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்:
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இலவச அரிசியை ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வழங்க வேண்டும். கொரோனா நிவாரணமாக மத்திய, மாநில அரசுகள் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் உள்ள ரேசன் கடைகள் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தமீம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்க வேண்டும். ரேசன் கடை ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.