செய்திகள்
பெட்ரோல்

தேவகோட்டையில் அதிமுக சார்பில் 100 ஆட்டோக்களுக்கு பெட்ரோல்

Published On 2020-06-07 10:26 GMT   |   Update On 2020-06-07 10:26 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அதிமுக மாணவரணி சார்பில் 100 ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது

தேவகோட்டை:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர்களின் ஏழை குடும்பங்கள் சிரமப்பட்டு வந்தன.

தற்போது நிபந்தனையுடன் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதை அறிந்த அ.தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் ஆசைத்தம்பி சொந்த செலவில் தேவகோட்டையில் உள்ள சுமார் 100 ஆட்டோக்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செந்தில்நாதன் ஆட்டோக்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தேவகோட்டை ஒன்றிய தலைவர் பிர்லாகணேசன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கார்த்திகேயன், நகர மாணவரணி மணி கண்டபிரபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News