செய்திகள்
கொலை

மானாமதுரையில் பெண் அடித்துக்கொலை- போதையில் மகன் வெறிச்செயல்

Published On 2020-06-06 06:51 GMT   |   Update On 2020-06-06 06:51 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே குடிபோதையில் தாயை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைராஜ். இவரது மனைவி முனியாயி (வயது60). இவர்களது மகன் ஜெயச்சந்திரன் (32). திருமணமான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

ஜெயச்சந்திரனின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது குழந்தைகளை பாட்டி முனியாயி பராமரித்து வந்தார்.

நேற்று பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்க முனியாயி, குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு தான் மட்டும் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ஜெயச்சந்திரன், குழந்தைகள் தனியாக இருப்பதை பார்த்து ஆத்தரம் அடைந்தார். அப்போது அவரது தாய் முனியாயி அங்கு வரவே ஜெயச்சந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த ஜெயச்சந்திரன் தாயை சரமாரியாக தாக்கினார். ரத்த காயம் அடைந்த முனியாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார் சம்பவ இடம் வந்து முனியாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜெயச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News