செய்திகள்
இருதரப்பினர் மோதல்

இடத்தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2020-06-01 11:40 GMT   |   Update On 2020-06-01 11:40 GMT
திருப்புவனத்தில் இடத்தகராறு காரணமாக 3 பேர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் பொன்னுசாமியை என்பவரை கைது செய்தனர்.
திருப்புவனம்:

திருப்புவனம் போலீஸ் சரகம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். மேல ரத வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. அண்ணன், தம்பிகளான இவர்கள் இடையே இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில் மாயகிருஷ்ணன் மகன் கவுதமன், ரகுவேல், செல்வராஜ் ஆகிய 3 பேரை பொன்னுச்சாமி மகன் விக்னேசுவரன், ராமநாதன், புவனேசுவரன் உள்பட 5 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டி உள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கவுதமன் கொடுத்த புகாரின்பேரில் 5 பேர் மீது திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தார்.
Tags:    

Similar News