செய்திகள்
இடத்தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு
திருப்புவனத்தில் இடத்தகராறு காரணமாக 3 பேர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் பொன்னுசாமியை என்பவரை கைது செய்தனர்.
திருப்புவனம்:
திருப்புவனம் போலீஸ் சரகம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். மேல ரத வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. அண்ணன், தம்பிகளான இவர்கள் இடையே இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்தநிலையில் மாயகிருஷ்ணன் மகன் கவுதமன், ரகுவேல், செல்வராஜ் ஆகிய 3 பேரை பொன்னுச்சாமி மகன் விக்னேசுவரன், ராமநாதன், புவனேசுவரன் உள்பட 5 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டி உள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கவுதமன் கொடுத்த புகாரின்பேரில் 5 பேர் மீது திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தார்.
திருப்புவனம் போலீஸ் சரகம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். மேல ரத வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. அண்ணன், தம்பிகளான இவர்கள் இடையே இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்தநிலையில் மாயகிருஷ்ணன் மகன் கவுதமன், ரகுவேல், செல்வராஜ் ஆகிய 3 பேரை பொன்னுச்சாமி மகன் விக்னேசுவரன், ராமநாதன், புவனேசுவரன் உள்பட 5 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டி உள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கவுதமன் கொடுத்த புகாரின்பேரில் 5 பேர் மீது திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தார்.