செய்திகள்
கைது

இளையான்குடி அருகே மது விற்றவர் கைது

Published On 2020-05-30 14:26 GMT   |   Update On 2020-05-30 14:26 GMT
இளையான்குடி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:

இளையான்குடி அருகே உள்ள புதூர் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ அந்த பகுதியில் சென்று சோதனை நடத்தியபோது அங்கு கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் மகன் மகேஷ்(வயது36) என்பவர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News