செய்திகள்
யானைகள்

குடியாத்தத்தில் மாந்தோப்புக்குள் புகுந்த 7 யானைகள்

Published On 2020-05-17 08:42 GMT   |   Update On 2020-05-17 08:42 GMT
குடியாத்தம் அடுத்த தன கொண்டபள்ளி கிராமம் வனப்பகுதி அருகே உள்ள நிலங்களுக்குள் நேற்று நள்ளிரவு 7 காட்டு யானைகள் புகுந்தது.

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த தன கொண்டபள்ளி கிராமம் வனப்பகுதி அருகே உள்ள நிலங்களுக்குள் நேற்று நள்ளிரவு 7 காட்டு யானைகள் புகுந்தது.

அங்கு நாகராஜ் மற்றும் கண்ணையன் என்பவரின் மாந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ஏராளமான மா மரங்களை ஒடித்து நாசப்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டு பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

Tags:    

Similar News