செய்திகள்
டாஸ்மாக் கடை

அரக்கோணத்தில் கடை திறந்தும் மது இல்லை- குடிமகன்கள் அவதி

Published On 2020-05-16 10:48 GMT   |   Update On 2020-05-16 10:48 GMT
அரக்கோணத்தில் கடை திறந்தும் மது இல்லாததால் ஏமாற்றமடைந்த குடிமகன்கள் தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் மது வாங்குவதற்கு காத்திருந்தனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அருகே மோசூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை 7 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.

இந்த கடையில் காலை 10 மணிக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடை முன்பு மது வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால் மதுக்கடையில் உள்ள சூப்பர்வைசர் கடையில் மதுபானம் இல்லாததால் ராணிப்பேட்டையில் இருந்து 2 மணிக்கு மேல்தான் மது கொண்டுவரப்படும் என கூறினார்.

இதனால் ஏமாற்றமடைந்த குடிமகன்கள் தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் மது வாங்குவதற்கு காத்திருந்தனர்.

Tags:    

Similar News