செய்திகள்
வேலூர் சிறை

பொங்கல் பண்டிகை - வேலூர் ஜெயில் கைதிகள் 47 பேர் பரோல் கேட்டு மனு

Published On 2020-01-11 10:32 GMT   |   Update On 2020-01-11 10:32 GMT
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வேலூர் சிறையில் உள்ள 47 கைதிகள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
வேலூர்:

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் பரோலில் செல்ல விண்ணப்பங்கள் அளிப்பார்கள்.

அதன் மீது விசாரணை நடத்தப்பட்டு, எந்த வில்லங்கமும் இல்லாத பட்சத்தில் கைதி செல்ல விரும்பும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வழங்கப்படும் அறிக்கை அடிப்படையில் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு வேலூர் சிறையில் உள்ள 47 கைதிகள் தங்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு பரோல் வழங்குவது குறித்து ஜெயில் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 15-ந் தேதி முதல் பரோலில் விடுவிக்கப்பட உள்ளனர்.

Tags:    

Similar News