செய்திகள்
புதுக்கோட்டை சிறையில் 50 போலீசார் அதிரடி சோதனை
புதுக்கோட்டை சிறையில் இன்று காலை டி.எஸ்.பி.குலசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கிளை சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு கைதிகளிடம் செல்போன், கஞ்சா புழக்கம் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து அவ்வப்போது போலீசார் சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை புதுக்கோட்டை டி.எஸ்.பி.குலசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். கைதிகள் அறைகள், கழிப்பறை, உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கைதிகள் சிலரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர்.
புதுக்கோட்டை கிளை சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு கைதிகளிடம் செல்போன், கஞ்சா புழக்கம் இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து அவ்வப்போது போலீசார் சிறையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை புதுக்கோட்டை டி.எஸ்.பி.குலசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். கைதிகள் அறைகள், கழிப்பறை, உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கைதிகள் சிலரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர்.