செய்திகள்
புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க. பிரமுகர் அடித்துக்கொலை
புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் அ.தி.மு.க. பிரமுகர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சூல்லாம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 40). அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்க துணை செயலாளராக உள்ளார். குடிமராமத்து பணிகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார்.
நேற்றிரவு குமார் பொன்னமராவதி புதூர் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். வழியில் அவரை வழிமறித்த மர்மநபர்கள் திடீரென அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரி வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த குமாரை, அந்த கும்பல் சாலையோரமுள்ள முட்புதரில் தூக்கி போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இரவு நேரம் என்பதால் குமார் முட்புதரில் கிடப்பதை பொதுமக்கள் யாரும் கவனிக்கவில்லை.
இன்று காலை பொது மக்கள் பார்த்ததும், அவரை உடனடியாக மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. அண்ணா துரை, உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குமாரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. காண்டிராக்ட் பிரச்சனையில் எதிராளிகள் யாராவது அவரை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட குமாருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சூல்லாம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 40). அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்க துணை செயலாளராக உள்ளார். குடிமராமத்து பணிகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார்.
நேற்றிரவு குமார் பொன்னமராவதி புதூர் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். வழியில் அவரை வழிமறித்த மர்மநபர்கள் திடீரென அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரி வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த குமாரை, அந்த கும்பல் சாலையோரமுள்ள முட்புதரில் தூக்கி போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இரவு நேரம் என்பதால் குமார் முட்புதரில் கிடப்பதை பொதுமக்கள் யாரும் கவனிக்கவில்லை.
இன்று காலை பொது மக்கள் பார்த்ததும், அவரை உடனடியாக மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. அண்ணா துரை, உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குமாரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. காண்டிராக்ட் பிரச்சனையில் எதிராளிகள் யாராவது அவரை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட குமாருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.