செய்திகள்
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2019-10-25 18:06 GMT   |   Update On 2019-10-25 18:06 GMT
மாணவர்கள் மற்றும் அனைத்து லயன்ஸ் சேவை சங்கங்கள், தீயணைப்புத்துறையினர் இணைந்து விபத்தில்லா தீபாவளி மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
பொன்னமராவதி:

பொன்னமராவதியில் உள்ள பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் அனைத்து லயன்ஸ் சேவை சங்கங்கள், பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர் இணைந்து விபத்தில்லா தீபாவளி மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதற்கு பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை லயன்ஸ் சங்க மண்டல தலைவர் மாணிக்கவேல் கொடியசைத்து தொடக்கி வைத்தார். வலையப்பட்டி பாப்பா ஆச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சேங்கை ஊரணி, காந்திசிலை, அண்ணாசாலை, பஸ் நிலையம் வழியாக சிவன் கோவில் வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து சிவன் கோவில் முன்பு தீயணைப்புத்துறை சார்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல்முறை விளக்கமும், டெங்கு காய்ச்சல் குறித்தும் சம்பந்தப்பட்ட நோய்களை தடுப்பது குறித்து விளக்க உரையும் நிகழ்த்தப்பட்டது.

பொன்னமராவதி தீயணைப்பு நிலையம் சார்பில், வேந்தன்பட்டி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News