செய்திகள்
தற்கொலை

மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு - வாலிபர் தற்கொலை

Published On 2019-10-11 10:35 GMT   |   Update On 2019-10-11 10:35 GMT
திருச்சி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:

திருச்சி சொக்கம்பட்டி அருகே உள்ள அயன் பொருவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 39). இவரது மனைவி தமிழரசி (30). இவர்கள் கோயமுத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வந்துள்ளது. இதனால் தமிழரசி கோபித்துக்கொண்டு பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த 24ம்தேதி தமிழரசியை அழைத்து செல்ல கொன்னையம்பட்டிக்கு முருகேசன் வந்து கூப்பிட்டுள்ளார். ஆனால் தமிழரசி வரவில்லை. மீண்டும் கடந்த 25ம்தேதி தமிழரசியை அழைத்தபோது அவர் வராததால் மனமுடைந்த முருகேசன் தான்கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முருகேசனின் தாய் சிவபாக்கியம், காரையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News