செய்திகள்

அருப்புக்கோட்டையில் பிரியாணி மாஸ்டர் தற்கொலை

Published On 2019-05-25 07:55 GMT   |   Update On 2019-05-25 07:55 GMT
அருப்புக்கோட்டையில் குடும்ப தகராறில் பிரியாணி மாஸ்டர் தற்கொலை செய்தார்.

பாலையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகே உள்ள அய்யன் ரெட்டிய பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இவர் குடும்பத்தினரை விட்டு பிரியாணி கடையிலேயே தங்கியிருந்தார். நேற்று இரவும் மணிகண்டன் கடையில் தங்கினார்.

இன்று காலை கடையை திறந்த போது அவர் பிணமாக கிடந்துள்ளார். அவரது அருகே வி‌ஷ பாட்டிலும் கிடந்தது. இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பால முருகன் மற்றும் போலீசார் விரைந்துச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணிகண்டன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News