செய்திகள்

அம்பையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2019-05-13 14:05 GMT   |   Update On 2019-05-13 14:05 GMT
அம்பையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:

அம்பை அருகே உள்ள ஊர்க்காட்டை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் மருதுபாண்டி(வயது 33). கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று இரவு இவர் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். 

இதனையடுத்து மருதுபாண்டி உடலை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை போலீசார் உடலை பெற்று அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து அம்பை போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News