செய்திகள்

கோபி அருகே காதல் தகராறில் டிரைவர் தற்கொலை

Published On 2019-05-12 14:27 GMT   |   Update On 2019-05-12 14:27 GMT
கோபி அருகே காதல் தகராறில் மனவேதனை அடைந்த டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோபி:

கோபியை அடுத்த கடத்தூர் அருகில் உள்ள இண்டியம் பாளையம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி அமலா. இவர்களுக்கு ஒரு மகளும், மதன் குமார் (வயது 19) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சின்னசாமி கடந்த 5 வருடத்திற்கு முன் இறந்து விட்டார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மதன்குமார் அரசூரில் மினிடோர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மதன்குமார் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விவகாரத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மதன்குமார் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்தார்.

இந்நிலையில் மதன்குமார் அரசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் அவரது தாய் அமலா மறுநாள் அரசூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போட பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மதன்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News