தேவகோட்டை அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் நாரணமங்கலத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
இங்கு சாத்திக்கோட்டையை சேர்ந்த வேம்பன் மகன் சேகர் (வயது 40) என்பவர் கட்டிட வேலை பார்த்து வந்தார்.
இவர் சம்பவத்தன்று பணிகளை முடித்து விட்டு மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார். இதில் எதிர்பாரத விதமாக மின்சாரம் சேகர் மீது பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சேகர் இறந்தார்.
சேகரை காப்பாற்றுவதற்காக அவருடன் பணியாற்றும் சாமிகண்ணு முயற்சி செய்தார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விசாரணை நடத்தி வருகிறார்கள்.