செய்திகள்

ஆரணி அருகே பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

Published On 2019-04-29 15:36 IST   |   Update On 2019-04-29 15:36:00 IST
ஆரணி அருகே பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம்:

ஆரணி அருகே உள்ள சின்னம்பேடு அய்யனார் மேடு பகுதியை சேர்ந்தவர் சர்மிளா. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நேதாஜி. இவர்களது வீட்டுக்கு நடுவே மாமரம் உள்ளது. இதில் துணி காயப்போட கயிறு கட்டும் போது இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நேதாஜி கத்தியால் சர்மிளாவை வெட்டினார். இதில் சர்மிளா காயம் அடைந்தார்.

இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து நேதாஜியை கைது செய்தனர்.

Tags:    

Similar News