செய்திகள்
மதுரை மத்திய சிறையில் கைதிகள் - காவலர்கள் இடையே மோதல்
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் உருவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MaduraiCentralPrison
மதுரை:
மதுரை மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சட்டைகளை அவிழ்த்து சிறையில் கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கைதிகள் கற்களை வீசினர். சிறை அருகே உள்ள சாலைகளில் கற்களை வீசியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiCentralPrison